×

பெரும்பாலை அருகே கட்டிட மேஸ்திரி அடித்துக்கொலை

தர்மபுரி, அக்.23: தர்மபுரி அருகே பெரும்பாலையில் கட்டிட மேஸ்திரியை அடித்துக்கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை நாகாவதி அணை அருகே, எர்ரப்பட்டி நாகர்கூடல் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்(45). கட்டிட மேஸ்திரியான இவரது மனைவி சங்கொலி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். முனியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதே பகுதியில் விவசாயி சுப்ரமணியம்(55) என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம், குடிபோதையில் அங்கு சென்ற முனியப்பன், சுப்ரமணியத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்ரமணியம், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் முனியப்பனை சரமாரியாக தாக்கினார். இதில், தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியப்பன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து பெரும்பாலை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, சுப்பிரமணியத்தை கைது செய்தனர்.

Tags : building mantle ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா